ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 9 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி வழங்கினார்.
சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலர் போந்தூர் செந்தில்ராஜன், முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி கலந்துகொண்டு, ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு உதவித்தொகை, விதவை உதவித்தொகை 2 பேருக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை 2 பேருக்கு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து 40-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் நிர்மல்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.