மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி நிதி அளிப்பு

தென்மேல்பாக்கம் கூட்டுறவு சங்கம் சார்பில், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்துக்கு செவ்வாய்க்கிழமை வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. 


தென்மேல்பாக்கம் கூட்டுறவு சங்கம் சார்பில், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்துக்கு செவ்வாய்க்கிழமை வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 2017-18 -ஆம் ஆண்டு ஈட்டிய லாபத் தொகையிலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி நிதி செலுத்த வேண்டும். அதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி 7 லட்சத்து 69 ஆயிரத்து 918 ரூபாய் மற்றும் கல்வி நிதி ரூ. 5,13,279 என மொத்தம் ரூ. 12 லட்சத்து 83 ஆயிரத்து 197-க்கான காசோலையை மண்டல இணைப் பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரிடம் தென்மேல்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் பி.தேவராஜன் வழங்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com