தென்மேல்பாக்கம் கூட்டுறவு சங்கம் சார்பில், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்துக்கு செவ்வாய்க்கிழமை வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 2017-18 -ஆம் ஆண்டு ஈட்டிய லாபத் தொகையிலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்துக்கு வளர்ச்சி நிதி செலுத்த வேண்டும். அதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி 7 லட்சத்து 69 ஆயிரத்து 918 ரூபாய் மற்றும் கல்வி நிதி ரூ. 5,13,279 என மொத்தம் ரூ. 12 லட்சத்து 83 ஆயிரத்து 197-க்கான காசோலையை மண்டல இணைப் பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரிடம் தென்மேல்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் பி.தேவராஜன் வழங்கினார்.