விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த விவரம்: புலிப்பாக்கத்தல் இளைஞர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்குத் தூண்டுதலாக இருந்ததாக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் செங்கல்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி துணைச் செயலர் வழக்குரைஞர் க.குமரேசன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைக் கண்டித்து அக்கட்சியின் காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என்று கூறி, அதை ரத்து செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின்  மத்திய மாவட்டச் செயலர் செங்கை இரா.தமிழரசன் தலைமை வகித்தார். ஏ.ஏ.அன்புச்செழியன், தே.தென்னவன், ச.சாந்தன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தீபக் கெளதமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com