குடியிருப்புகள் அருகே சட்ட விரோத மது விற்பனை: பொது மக்கள் புகார்

சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள்


சூலுர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
சூலூர் அருகே உள்ளது காங்கேயம்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும், அதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அப்பகுதி பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மனுவின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com