பொள்ளாச்சி அருகே ரயிலில் பாய்ந்து இருவர் தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆண் உயிரிழந்தார்; இலங்கையைச் சேர்ந்த பெண் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸார் கூறியதாவது:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (55). இவரும் இலங்கையைச் சேர்ந்த மனோரஞ்சிதம் (45) என்ற பெண்ணும் முகநூலில் பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இருவரும் பொள்ளாச்சியை அடுத்த ஊத்துக்காடு அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனோரஞ்சிதம் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.