கருமத்தம்பட்டியில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடந்தது.
கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளார் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. தமிழக அரசு அண்மையில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழ்நாடு காவலர்கள் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இரண்டு அடுக்கு மாடி கட்டடம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது.
இதில் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆறுச்சாமி, தமிழ்நாடு விட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர், கட்டட ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கட்டடம் கீழ் அடுக்கு குடியிருப்பாகவும், மேல் தளம் அலுவலகமாகவும் பயன்படுத்தும் வகையில் ரூ. 78 லட்சத்தில் கட்டப்பட உள்ளது என கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.