அரசூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் வரும் திங்கள்கிழமை (நவம்பர் 19) காலை 9 முதல் மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுன்டனூர், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் (ஒரு பகுதி), சூலூர் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.