ரயில்வே தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து

பிரேக் பழுதானதால் ரயில்வே தடுப்பில் மோதி அரசுப் பேருந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

பிரேக் பழுதானதால் ரயில்வே தடுப்பில் மோதி அரசுப் பேருந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
கோவை காந்திபுரத்தில் இருந்து வாளையாறு பகுதிக்கு சனிக்கிழமை காலையில் பயணிகளுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து மரப்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பிரேக் பழுடைந்தது. 
இதையடுத்து, ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் ரயில்வே பாலம் அருகே உள்ள தடுப்பில் மோதி பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து மூலமாக வாளையாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com