சூலூர் அருகே பாப்பம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி அயோத்தியாபுரத்தில் வசிப்பவர் தனபாக்கியம்(45). இவர், தனது தாயாருடன் வசித்துவருகிறார். இந்நிலையில், தனபாக்கியம் சூலூரில் உள்ள நூற்பாலைக்கு ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுள்ளார். அவரது தாயார் கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பிவந்தபோது, வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், நகை இல்லாததால் அங்கிருந்த பித்தளைப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.