உடனடியாக சம்பளம் வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்ததால், டேன்டீ தொழிலாளர்கள் போராட்ட முடிவைக் கைவிட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே சின்கோனா (டேன்டீ) எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினர் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கவில்லை.
இம்மாதமும் 7 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்த புதன்கிழமை தயாராயினர்.
இதை அறிந்த டேன்டீ நிர்வாகத்தினர் தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தனர். எனவே, தொழிலாளர்கள் போராட்ட முடிவைக் கைவிட்டனர்.