மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வனத் துறை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வால்பாறையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதி ஒட்டி அமைந்துள்ள பாலக்கினாறு செட்டில்மெண்டில் உள்ள குடியிருப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் பொருள்களை இழுந்தனர்.
இதையடுத்து செட்டில்மெண்ட் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் மானாம்பள்ளி வனச் சரக அலுவலர் நடராஜ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு வனத் துறை சார்பில் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.