கோவையில் எரிக்கப்பட்ட  நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோவை, பீளமேடு  அருகே, எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கோவை, பீளமேடு  அருகே, எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கோவை, பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம், ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தவருக்கு சுமார் 20 வயது இருக்கலாம் என்பதும்,  உடல் எரிக்கப்பட்டு 10 முதல் 15 நாள்கள் இருக்கும் என்பதும் தெரியவந்தது. ஆனால், அவர் யார், எந்த ஊர் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. 
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் கூறியதாவது:
 தண்டவாளத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் சடலம் கிடந்துள்ளது. ரயிலில் அடிபட்டிருந்தால் சுமார் 3 முதல் 4 மீட்டர் தொலைவில்தான் சடலம் கிடந்திருக்கும்.
எனவே, அவரை வேறு பகுதியில் கொலை செய்து, சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், சடலம் முற்றிலுமாக எரிந்தும், அழுகிய நிலையிலும் இருப்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்த விவரம் தெரியவரும் என்றனர்.
கணபதி அருகே ரயில் மோதி இருவர் சாவு: கோவை, கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்தின் கீழே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதை ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் கோவை ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதேபோல, அதேபகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதி இறந்துகிடப்பதை திங்கள்கிழமை காலையில் அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், ரயிலில் மோதி இறந்தவர் கோவை, டாடாபாத் பகுதியைச் சேர்ந்த ஆர்.வெங்கடேஸ்வரன் என்பதும், மருத்துவமனைகளில் கிழிந்துள்ள படுக்கைகளைத் தைத்துக் கொடுக்கும் தொழில் செய்துவந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கோவை ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com