கோவை, குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம்.