கோவை அருகே மதுக்கரையில், கல்லூரி பேராசிரியர் வீட்டில் பட்டப் பகலில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, வஞ்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சார்லி (52). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்சியா செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு சார்லி, தனது மனைவி, மகளுடன் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
அதிர்ச்சியடைந்த சார்லி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, மதுக்கரை காவல் நிலையத்தில் சார்லி புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.