காரமடை தேர்த் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரமடை தேர்த் திருவழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை, ஈரோடு, உதகை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து காரமடை தேர் திருவிழாவுக்கு பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக கோவை மண்டலத்தில் இருந்து 100 பேருந்துகள், திருப்பூர் மண்டலத்தில் இருந்து 35 பேருந்துகள், ஈரோடு மண்டலத்தில் இருந்து 30, ஊட்டி மண்டலத்தில் இருந்து 35 பேருந்துகள் என மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.