தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பில் ஸ்கேனிங் பிரிவில் வடிவமைப்பாளராகப் (பேஜினேட்டர்) பணிபுரிந்த ஆர்.வெங்கடேசமூர்த்தி பணியிலிருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹைதராபாத், திருநெல்வேலி, கோவை பதிப்புகளில் 34 ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார்.
அவருக்கான பிரிவுபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை கிளை முதுநிலை மேலாளர் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவினரும், அலுவலக ஊழியர்களும் பங்கேற்றனர்.