மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நேஷனல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இந்திய வன விலங்கு அறக்கட்டளை சார்பில் கஜ யாத்திரை யானை நல விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கே.ரங்கசாமி, ஓசை அமைப்புத் தலைவர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியின் மாணவ, மாணவியர் யானையின் முகமூடி அணிந்தும், குறு நாடகங்கள் நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
விழாவில் செயலாளர் வேலுசாமி , இணைச் செயலாளர் சந்திரன், நிர்வாக அறங்காவலர் ஏ.வி.ராமசாமி, முதல்வர் மனோன்மணி, சமூக ஆர்வலர் எம்.சு.மணி, கலைக்குழுவின் தலைவர் பிரபாகர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.