வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கட்சியின் நகரச் செயலாளர் நெல்லை செல்வன், பேரவை மாவட்ட இணைச் செயலாளர் பாபுஜி, குஞ்சாலி, சண்முகவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.