இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம் ஈரோட்டில் புதன்கிழமை (நவம்பர் 14) நடைபெறுகிறது.

ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம் ஈரோட்டில் புதன்கிழமை (நவம்பர் 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் (பொ) கே.இந்திராணி வெளியிட்ட தகவல்:
மின் நுகர்வோரின் குறைகளைக் கேட்டறிந்து களையும் நோக்கில் மாதம்தோறும் இரண்டாவது வாரத்தின் புதன்கிழமை அன்று மின் வாரியத்தால் குறைகேட்பு முகாம்  நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம் புதன்கிழமை (நவம்பர் 14) காலை 11 மணிக்கு ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் மின் நுகர்வோர் கலந்துகொண்டு மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com