ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கஜா புயல் நிவாரண உதவி

கஜா புயல் நிவாரண உதவியாக ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ. 3.80 லட்சம் மதிப்பிலான 10 டன் அரிசி  அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயல் நிவாரண உதவியாக ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ. 3.80 லட்சம் மதிப்பிலான 10 டன் அரிசி  அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட  ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட  ஆட்சியர்  சி.கதிரவன் முன்னிலையில் தஞ்சை மாவட்டத்துக்கு நிவாரணப் பொருள்கள் லாரியில் அனுப்பிவைக்கப்பட்டன. இதில், சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, செந்தில்குமார் மற்றும் செங்கதிர்வேலன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com