பெருந்துறை ஒன்றியம், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் மக்கள் குறைக்கேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி வெங்கடாசலம், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், அவைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.