காற்று ஒலிப்பான் பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

காற்று ஒலிப்பான்களைப்  பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.

காற்று ஒலிப்பான்களைப்  பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.
ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸார் திங்கள்கிழமை மாலை ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டம், கொளத்தூரில் இருந்து ஈரோடு வந்த தனியார் பேருந்து, பவானியில் இருந்து வந்த தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது தெரியவந்தது.   
இந்தப் பேருந்துகளை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் கொளத்தூரில் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அபராதத்தைக் கட்டாமல் பேருந்தை எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com