சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மல்லியம்மன் கோயில் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
காணும் பொங்கலையொட்டி கடம்பூர் செல்லும் வழியில் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள மல்லியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவுக்கு, சத்தியமங்கலம், வடக்குபேட்டை, கடம்பூர்,அத்தியூர், கரளியம், காடகநல்லி, கானக்குந்தூர், குன்றி, மாக்கம்பாளையம், கோட்டமாளம்,திங்களூர், சுஜ்ஜில்கரை, பவளக்குட்டை, மல்லியம்மன்துருவம், காடட்டி, இருட்டிபாளையம், அணைக்கரை, எக்கத்தூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பொதுமக்கள் குடும்பம்குடும்பமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், கால்நடையாகவும் வந்து மல்லியம்மனை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, கடம்பூர் போலீஸார், வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்து வசதியில்லாததால் பெரும்பாலான பக்தர்கள் வாடகை வேனில் வந்தனர்.