வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள் தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வனச் சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். கௌரவ வன உயிரினக் காப்பாளர் பேராசிரியர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். உலக வனநாள் குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.
உலக வன நாள் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதில், ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி கீதா, உலக வன உயிரின காப்பக நிறுவன ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.