தேசிய அளவிலான எறிபந்துப் போட்டிக்காக தமிழக அணியின் மிகமூத்தோர் பிரிவில் விளையாட பெருந்துறை, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலம், பானிபட் நகரில் மார்ச் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் தேசிய அளவிலான எறிபந்துப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில், தமிழக அணிக்காக சுவாமி விவேகானந்தா மெடரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான அ.பூபாலன், ப.ரா.ஹரிபிரசாந்த், ர.கெளதம், அஸ்வின்ராஜ், பு.ஜீ.புருஷோத்தமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியின் தலைவராக இப்பள்ளி மாணவன் ர.கெளதம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோரை பள்ளித் தலைவர் சின்னசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் மாணிக்கமூர்த்தி, முதல்வர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.