கூடலூரில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி திங்கள்கிழமை துவங்கியது.
கூடலூர், பந்தலூர் பகுதி பள்ளிகளிலுள்ள என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை துவங்கியது. இந்த முகாமில் லெப்டினன்ட் கர்னல் ஜே.என்.தேப் தலைமை வகித்து பயிற்சியளிக்கிறார்.
இந்தப் பயிற்சியில் சுபேதார் சந்தோஷ், என்.சி.சி. அலுவலர்கள் ராஜ்,புண்ணியமூர்த்தி, சுமிதா, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளிக்கின்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 7 எந்.சி.சி. மாணவ, மாணவிகள் இதில் பயிற்சி பெறுகின்றனர்.