கூடலூர் சாலையிலுள்ள முட்புதர்களை போக்குவரத்துக் காவலர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.
கூடலூர்- உதகை சாலையில் உள்ள வளைவுகளில் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே விபத்தைத் தவிர்ப்பதற்காக கூடலூர் காவல் துறையினர் அனைவரும் கூடி சாலையோர முட்புதர்களை அகற்றினர்.