கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு, புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு ஆகியவை சார்பில் புனித ஹோம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை மாணவ மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புளூமவுன்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில நுகர்வோர் சங்க துணைத் தலைவர் ராஜன், பள்ளித் தாளாளர் ரோஸ்லின், தலைமை ஆசிரியர் கரோலின், அரசு மருத்துவமனை மருத்துவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து புனித ஹோம் மெட்ரிக். பள்ளி, புனித அந்தோணியார் பள்ளியைச் சேர்ந்த 2,000 மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.