கோத்தகிரி சக்திமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சக்திமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்கார பூஜையும், அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முருக பெருமான் திருவீதி உலா நடைபெற்றது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களுக்கு பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி சேவா சங்கத் தலைவர் போஜராஜன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.