பந்தலூரில் கைவினை பொருள்கள் கண்காட்சி

பந்தலூரில் கைவினைப் பொருள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பந்தலூரில் கைவினைப் பொருள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தலூர், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கைவினைப் பொருள் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், காந்தி பொது சேவை மையத் தலைவர் நெளஷாத் ஆகியோர் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பார்வையிட்டனர்.
பயன்படுத்தி வீசியெறியும் வீணான பொருள்களைக் கொண்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அன்றாடம் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களைத்  தயாரித்து காட்சிக்கு மாணவிகள் வைத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரோஸ்மேரி, மார்ட்டின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com