இணைய சேவை பாதிப்பு: இ-சேவை மைய பணிகளில் தொய்வு

குன்னூரில் அடிக்கடி ஏற்படும் இணைய சேவை பிரச்னை காரணமாக, இ-சேவை மையங்களில் மூன்று மாதங்களாக முழுமையாகப் பணிகளை மேற்கொள்ள


குன்னூரில் அடிக்கடி ஏற்படும் இணைய சேவை பிரச்னை காரணமாக, இ-சேவை மையங்களில் மூன்று மாதங்களாக முழுமையாகப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளான கிராமங்களில் உள்ள இ-சேவை மையங்களில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டு பணிகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதனால், ஆன்லைன் பிரச்னை எனக் கூறி இ-சேவை மையங்களில் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது தொடர்கிறது. இதன்காரணமாக, அரசின் திட்டங்களைப் பெறுவதில் பலவேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து, பி.எஸ்.எல்.எல். தொலைத்தொடர்பு உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் பலமுறை புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இ-சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com