மஞ்சூர் அருகே கொண்டை ஊசி வளைவில் அரசுப் பேருந்து மோதியதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூருக்கு உதகையில் இருந்து எடக்காடு வழியாக அரசுப் பேருந்து 9 பயணிகளுடன் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. அப்போது 9ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் உள்ள சுவரில் மோதியது.
இதில் பேருந்தில் பயணம் செய்த நடத்துநர் உமாகாந்த், ஓட்டுநர் லோகநாதன், பயணிகளான, கன்னேரிமந்தனை கிராமத்தைச் சேர்ந்த வத்சலா (45), மணியட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (61), தங்காடு ஓரநள்ளி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (73), சேரனூர் தொட்டக்கம்மை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (65), கொடமறா கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (60), கன்னேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30), லவ்டேல் கிராமத்தைச் சேர்ந்த தேவன் (54) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, அவ்வழியாக வந்த தனியார் வாகனம் மூலம் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பேருந்து நடத்துநர் உமாகாந்த், கொடமறா கிராமத்தைச் பழனிசாமி ஆகியோர் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.