கூடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கூடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கூடலூர் ரோட்டரி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் கூடலூர் வண்டிப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ரோட்டரி கிளப் நிர்வாகி தம்பு தலைமை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
250-க்கும் மேற்பட்டோர் இதில் பரிசோதனை செய்துகொண்டனர். அதில் கண் அறுவை சிகிச்சைக்கு 70 பேர் பரிந்துரைக்கப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com