காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கூடலூரில் இரங்கல்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கூடலூரில் சனிக்கிழமை மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 


காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கூடலூரில் சனிக்கிழமை மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. 
 கூடலூர் நகர வியாபாரிகள் சார்பில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதில் அனைத்து வியாபாரிகள் பொதுநல அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இந்த மௌன ஊர்வலம் ராஜகோபாலபுரத்தில் இருந்து துவங்கி முக்கியச் சாலைகள் வழியாக கூடலூர் பேருந்து நிலையம் வரையில் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com