உதகையில் 26இல் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

உதகையில் முன்னாள் படை வீரர், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் முன்னாள் படை வீரர், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில்  ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே, இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் பங்கேற்று,  தங்களது கோரிக்கைகளை மனுக்களின் வாயிலாக இரட்டைப் பிரதிகளின் மூலம்  தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com