நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளன.
உதகை வட்டத்தில் பனஹட்டி சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் ஆடர்லி எஸ்டேட் சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் அந்த ஊர் சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் கெச்சிகட்டி சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் வண்ணாத்தி வயல் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.