கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூர் வருவாய் வட்டத்திலுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள ஏழைப் பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 96 பயனாளிகளுக்கு தலா நான்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் நந்தினி, டாக்டர் டேவிட் மோகன், அய்யன்கொல்லி கால்நடை மருத்துவர் ரேவதி, சேரம்பாடி கால்நடை மருத்துவர் ஜீவா, பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆடுகளை
வழங்கினார்கள்.