மசினகுடி பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட எஸ்.பி.சண்முகப் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து நடத்திய மனு நீதி நாள் முகாமில் முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்து 52 மனுக்கள் பெறப்பட்டன.
அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.