திருப்பூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில், கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். பள்ளி மாணவர் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், முத்தூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 1,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், தாமரை மெட்ரிக். பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர் கார்த்திக் பங்கேற்று மூன்றாவது இடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர் கார்த்திக், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் ஆகியோரை பள்ளித் தாளாளர் ராஜா, செயலாளர் ஆனந்த், பள்ளி முதல்வர் அசோக், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.