பல்லடத்தில் இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு

பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் புதன்கிழமை(அக்டோபர் 17) நடைபெறவுள்ளது.

பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் புதன்கிழமை(அக்டோபர் 17) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்ததாவது: 
பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்டோபர் 17) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்த குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com