உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பயிலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கு.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் உ.பெ.இராமலிங்கம் வரவேற்றார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக தெற்கு மண்டல பிராந்திய மேலாளர் மற்றும் சட்ட அலுவலர் (பணி ஓய்வு) ஆர்.வெங்கடேசன் இந்திய சட்ட அமைப்பு மற்றும் மனித உரிமைகள் எனும் தலைப்பில் பேசினார்.
இதில் முக்கிய சட்டப் பிரிவுகள், மனித உரிமைகள் குறித்த சட்ட நடைமுறைகள், அழைப்பாணை (சம்மன்), பிடியாணை (வாரண்ட்), பிணை (ஜாமீன்), முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற வகைகள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், இது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பேராசிரியர் இரா.தி.கருணாகரன் நன்றி கூறினார். இயற்பிஸ்யல் துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.