வெள்ளக்கோவில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆலயத்தின் பங்குத் தந்தை இருதயராஜ் தலைமை வகித்தார். மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள், தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன.
திருவிழா கூட்டுப் பாடல் திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம், திருப்பலியில் காணிக்கையாக அப்பம், இரசம், மெழுகுதிரிகள் வழங்கப்பட்டன. முன்னதாக கொடியேற்றம், மறையுரையுடன் திருவிழா தொடங்கப்பட்டது.
காமராஜபுரம், தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம், கே.பி.சி. நகர் வழியாகத் தேரோட்டம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு மக்கள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.