திருப்பூர் மாவட்டத்தில் 36 இடங்களில் என்.எஸ்.எஸ். முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த முகாம்கள் ஒரு வாரம் நடைபெற உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒரு வார கால என்.எஸ்.எஸ். முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த முகாம்களில் மாணவர்களுக்கு சமூக சேவைப் பயிற்சி அளிக்கப்படுவதுடன் ஆளுமைப் பண்பை வளர்க்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். பல்லடம் அருகே கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாமை திருப்பூர் மாவட்ட என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் ஏ.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்துப் பேசினார்.
இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வி.ஹரிகோபால், வாவிபாளையம் பார்த்தசாரதி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி உள்பட பலர் பங்கேற்றனர்.