காங்கயத்தில் காங்கிரஸ் சார்பில் கிராம சபைக் கூட்டம்

காங்கயம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சிக்காம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


காங்கயம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சிக்காம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர். 
 காங்கயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட சிக்காம்பாளையம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார்.
 இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ்சந்த் யாதவ், செயலாளர் ஜெபிமேத்தர், கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 இக் கூட்டத்தில் தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ்சந்த் யாதவ் பேசியதாவது:
 காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டால் அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உறுதி செய்யப்படும். விவசாய விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களுக்கு வங்கி மூலம் கல்விக் கடன் உறுதி செய்யப்படும் என்றார்.
 இந்தக் கூட்டத்தில் சிக்காம்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com