பல்லடத்தில் பிப்ரவரி 20 இல் மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

பல்லடத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி (புதன்கிழமை) மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

பல்லடத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி (புதன்கிழமை) மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
 பல்லடம் பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் கே.தமிழ்சேகரன் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 
 இதில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com