காங்கயம் நகராட்சியின் புதிய ஆணையராக பொன்னம்பலம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கயம் நகராட்சி ஆணையராக இருந்த பா.தேவிகா, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த பொன்னம்பலம் காங்கயம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.