பல்லடம் அரசுக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு குங்பூ என்ற தற்காப்புப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தேவி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மஞ்சூரியா குங்பூ பயிற்சியாளர் கணபதி மாணவ, மாணவியருக்கு தற்காப்புப் பயிற்சிகளை அளித்தார். தற்காப்புக் கலைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. குறிப்பாக பெண்கள் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது அவசியம் என்று பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் ஆ.அண்ணாதுரை செய்திருந்தார்.