தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் பாவலர் கோ.மலர்வண்ணன் தலைமை வகித்தார். கிளை நூலகர் சி.சரவணன் வரவேற்றார். தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சி.சந்திரசேகர், பாரதியின் உருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார்.
கடத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடத்தூர் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி, புலவர் நெடுமிடல், ஆசிரியைகள் நிர்மலா, லீலா நூலகர் கி.நீலமேகன் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.