பாலக்கோடு வட்டத்துக்குள்பட்ட செல்லியம்பட்டி கிராமத்தில் இளைஞர்களுக்கான நுண்ணீர்ப் பாசனம் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவிப் பொறியாளர் பொ.பத்மாவதி தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், நுண்ணீர்ப் பாசன முறையை ஏன் பயன்படுத்த வேண்டும், அதன் நன்மைகள், அதற்கான உபகரணங்கள், எவ்வாறு பராமரிக்க வேண்டும், எந்த பயிர்களுக்கெல்லாம் நுண்ணீர் முறையை பயன்படுத்தலாம் என விளக்கமளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் உதவி வேளாண் அலுவலர் ஆர்.கோவிந்தன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் எம்.சிவசங்கரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.