ஜூடோ போட்டி:  ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
மகளிர் மிக மூத்தோர் பிரிவில் கே.நிகேதா, எஸ்.வினோதா முதலிடமும், எஸ்.சௌமியா, ஆர்.திவ்யா, எஸ்.சிவசங்கரி ஆகியோர் மூன்றாமிடமும், மூத்தோர் பிரிவில் டி.ஜனனி முதலிடமும், ஆர்.ராஜ ஸ்ரீ மூன்றாமிடமும், இளையோர் பிரிவில் பி.சகானா இரண்டாமிடமும், பி.சுமிதா மூன்றாமிடமும் பெற்றனர்.
ஆண்கள் மிக மூத்தோர் பிரிவில் பி.வினோத் கண்ணா, எம்.காண்டீபன் இரண்டாமிடம், எம்.ஹரிபிரசாத், ஜெ.மோகன்குமார் மூன்றாமிடம், இளையோர் பிரிவில் ஆர்.கே.மதன், ஜி.கதிர்வேல் ஆகியோர் இரண்டாமிடம், சப்- ஜூனியர் பிரிவில் வி.தினேஷ், ஆர்.அகரன், ஜி.பாலசந்துரு, ஜி.ஹரிஷ் ஆகியோர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.  விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை ஸ்டான்லி கல்வி  நிறுவனங்களின் தாளாளர் வி.முருகேசன், செயலர் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், உடல் கல்வி ஆசிரியர் ஆர்.சத்யராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com